என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    • 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனா ளிகள் உதவிகள் பெற அதற்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் காட்பாடி, குடியாத்தம் ஆகிய தாலுகாக்களில் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 19-ந் தேதி வேலூர் டவுன்ஹாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாற்றுத்திறனா ளிகள் தங்களின் ஆதார்அட்டை, குடும்ப அட்டை, 4 புகைப்ப டத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×