search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bilateral conflict"

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் அருகே உள்ள தாங்கல் அம் மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம்.

    இவரது மகன் தாமோ தரன் (வயது 39). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் ராமு (28), ராஜேஷ் (28). தாமோதரன் வீட்டு கழிவுநீர் ராமு மற்றும் ராஜேஷ் வீட்டின் முன் பகுதியில் செல்கிறது. இது குறித்து ராமு, ராஜேஷ் ஆகிய இருவரும், தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கழிவு நீர் அதிகமாக இவர்கள் வீட்டு முன் சென்றதால் மீண்டும் இவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு தாமோதரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சரவணன், மற்றும் ராமு, ராஜேஷ் ஆகி யோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 4 பேரும் காயமடைந்தனர். தாமோதரன் மற்றும் ராமு ஆகிய 2 பேரும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து 2 தரப்பினரும் பள்ளிகொண்டா போலீ சில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ராமு ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அய்யம்பெருமாள் என்பவரது மகன் பிரகாஷ் என்பவருடன் தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனது தம்பி (16) என்பவரை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருந்த சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கைகளால் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து தண்டலை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்செல்வம், லோகேஷ், பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், சரண் உள்ளிட்ட 12 பேர் மீதும், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த மணி, பிரகாஷ், விக்னேஷ், தங்கபாலு, கண்ணன், கதிர் உள்ளிட்ட 13 பேர், ஆக மொத்தம் 25 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் 2 மைனர்கள் மற்றும் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (18), சரண் (18), தண்டலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19), விக்னேஷ் (19), தங்கபாலு (20), கண்ணன் (18), கண்ணன் (43) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சித்தேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை கப்பலூரை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் மணிபாண்டி (வயது23). அதே ஊரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும், மணிபாண்டியின் தங்கையும் காதலித்தனர்.

    சம்பவத்தன்று மணிபாண்டியின் செல்போனில் இருந்து தினேசிடம் காதலி பேசி உள்ளார். அதன் பின்னர் அந்த செல்போனுக்கு தினேஷ் சில தகவல்களை பறிமாறி உள்ளார்.

    இது மணிபாண்டிக்கு தெரியவந்ததும் தினேசை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று உச்சப்பட்டி சுடுகாடு அருகே மணிபாண்டி நின்று கொண்டிருந்தபோது தினேஷ், அவரது நண்பர் அப்புக்குட்டி என்ற குரு அங்கு வந்தனர். அவர்கள் மணிபாண்டியிடம் வாக்கு வாதம் செய்து தாக்கவும் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மணிபாண்டி தனது நண்பர்களை அழைத்து வந்து தினேஷ் மற்றும் அப்புக்குட்டியை தாக்கினார். இதுதொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர்.

    மணிபாண்டி புகாரின் பேரில் தினேஷ் மற்றும் அப்புக்குட்டி மீதும், அப்புக்குட்டி புகாரின்பேரில் மணிபாண்டி, பாலு, வெற்றி, நடேசன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×