என் மலர்
வேலூர்
- 19-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனா ளிகள் உதவிகள் பெற அதற்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் காட்பாடி, குடியாத்தம் ஆகிய தாலுகாக்களில் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 19-ந் தேதி வேலூர் டவுன்ஹாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனா ளிகள் தங்களின் ஆதார்அட்டை, குடும்ப அட்டை, 4 புகைப்ப டத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வனத்துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தென்புதூர் கிராம ஒருவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது.
நேற்று மாலை அந்த மந்தோப்பில் சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வனக்காப்பாளர்கள் மனிவாசுகி, அஜித், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து நிலத்தில் இருந்த 30 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள இராசிமலை காப்பு காட்டில் விட்டனர்.
- துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேலூர்:
வேலூர் காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது. வேலூர் சிஎம்சி யில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்து செல்லும் பயணிகள் காட்பாடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் பஸ்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
காட்பாடி சாலையில் உள்ள கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தவில்லை.
இதனால் அங்குள்ள தங்கம் விடுதிகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கால்வாயில் அடைப்பு உள்ளதால் கழிவு நீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். இதேபோல் பெங்களூர் சாலையில் உள்ள டி மண்டி தெருவில் அரிசி பருப்பு எண்ணெய் மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது.
இதனால் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவு நீரை கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திடீரென மாயமானார்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியை சேர்ந்தவர் உமாபதி (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
இவரது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த நிலையில், கடந்த 7 மாதங் களாக குடியாத்தம் அருகே உள்ள பக்கிரிபல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மேலும், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இவர் திடீரென மாயமானார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உமாபதி இறந்த நிலையில் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உமாபதி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மலை கிராம மக்கள் அவதி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது காட்பாடி அடுத்த செஞ்சி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-
எங்கள் ஊரில் 2. 58 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்காக பயன்படுத்தி வருகிறோம் திடீரென்று தற்போது பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர்கள் அந்த சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து எரிமேடை கட்டி கொடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இதேபோல் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தின் வழியாக வேலூர் முதல் அமிர்தி உயிரியல் பூங்கா வரை செல்லும் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை துத்திக்காடு ஊராட்சி முதல் நஞ்சுக்கொண்டாபுரம் வழியாக அமிர்தி வன உயிரியல் பூங்கா வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சேதம் அடைந்து உள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலை ஜமுனாமரத்தூர் தாலுகா உள்ளடக்கிய சுமார் 150 மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.
- வேலூர் கோட்டையில் துணிகரம்
- செல்போனை பறிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலூர் கோட்டை கொத்தளம் பகுதியில் சிலர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முபாரக் (வயது 34) என்பவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களில் ஒரு வாலிபரிடம் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வாலிபரை முபாரக் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் சத்தம் போடவும் முபாரக் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவரை கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீஸ்காரர் தமிழரசன் பிடிக்க முயன்றார். அப்போது முபாராக் கையில் வைத்திருந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் தமிழரசனை குத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் அவர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்குள்ள வாகனங்களை சேதப்படுத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை போலீஸ்காரர் பாலாஜி தடுக்க முயன்றார். அவரையும் முபாரக் பாட்டிலால் குத்தினார்.
வாலிபர் கைது
அதற்குள் அங்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் முபாரக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களையும் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து முபாரக்கை அண்ணா சாலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது முபாரக் தப்பி ஓடினார். உடனே முபாரக்கை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்.
அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணையில் முபாரக் போதையில் இருந்ததும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
- வாலிபர் தாக்கியதால் மண்டை உடைந்தது
வேலூர்:
வேலூர் ஓல்டு டவுன், செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.
அப்போது எதிர் தரப்பை சேர்ந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் வேலூர் தெற்கு போலீசில் நிலையத்திற்கு ஓடி வந்தார்.
பெண்ணை தாக்கிய வாலிபர் அவரை பின்தொடர்ந்து போலீசில் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து வைத்துக்கொண்டனர். பெண்ணை ஆஸ்பத்திரிக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து போலீஸ் நிலைய நுழைவாயில் அமர்ந்து தன்னை தாக்கிய வாலிபரை வெளியே அனுப்புங்கள். நானும் ரவுடிதான் என்று கூறினார்.
மண்டையை உடைத்த அவனது மண்டையும் உடைக்க வேண்டும்.அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என அடம் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபருடன் பைக்கில் ஏறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார்.
ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் நிலையம் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சா லையில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கண்ணாடி லோடுகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் வந்துக் கொண்டிருந்த வேன் மோதியதில் வேன் டிரைவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பிரகாஷ் (வயது 36) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (வயது 35) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரகாஷ் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார். லோடு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பினார்.
கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
+2
- காலப்போக்கில் முழுக்க முழுக்க மூங்கில்களால் தனக்கு தானே கோவில் போன்று அம்மன் அரண் அமைத்து கொண்டதாக நம்பப்படுகிறது.
- அம்மனை தரிசனம் செய்ய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒடுகத்தூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கிராமத்தில் காட்டு காளியம்மன் கோவில் உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தம் பகுதியில் வசித்து வந்த ஆதி பழங்குடியினத்தவர்கள் இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அங்குள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் மற்றும் தேன் போன்றவைகளை எடுத்து உண்டும், விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர்.
அப்படி ஒரு நாள் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று கிழங்கு எடுத்து கொண்டிருக்கும் போது மண்வெட்டியால் ஓரிடத்தில் தோண்டிய போது ரத்தம் கொட்டியதாம். அப்போது, புகை மூட்டத்துடன் ஓர் அசரீரி வந்து 'நான் இங்கு தான் இருக்கிறேன், உலகத்தை காக்க வனத்தில் குடி கொண்டிருக்கிறேன்' நீ திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடு என்று சொல்லி விட்டு மறைந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆனால் அந்த நபர் திரும்பி பார்த்தார். மேலும் இதை பற்றி ஊர் பெரியவர்களிடம் நடந்ததை கூறினார். அதன் பின்னர் ஊர் பொதுமக்கள் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கிழங்கில் அம்மன் வடிவில் ஒரு உருவம் இருந்துள்ளது.
மேலும், இதனை தோண்டிய நபர் அன்றே இறந்தும் போயியுள்ளார். அவரின் சடலத்தை அம்மன் தோன்றிய இடத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.
பின்னர், காலப்போக்கில் முழுக்க முழுக்க மூங்கில்களால் தனக்கு தானே கோவில் போன்று அம்மன் அரண் அமைத்து கொண்டதாக நம்பப்படுகிறது. அன்று முதல் இன்று வரை காலம் காலமாக கிழங்கு வடிவிலான அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் வனத்தில் தோன்றியதால் அம்மனுக்கு வன காட்டு காளியம்மன் என்று அழைத்தனர்.
இந்நிலையில், ஆண்டு தோறும் கொண்டாடப்படும் வன காட்டு காளியம்மன் கோவில் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, ஊர் மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, குளக்கரையில் இருந்து அம்மனின் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து வன காட்டு காளியம்மனுக்கு வைத்து சிறப்பித்தனர்.
அப்போது, வழி நெடுகிலும் குழந்தை வரம், திருமணம் வேண்டி தரையில் படுத்திருந்தனர். அந்த பக்தர்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள் வாக்கு கூறினார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த அம்மனை தரிசனம் செய்ய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வன காட்டு காளியம்மனை பக்தியுடன் வேண்டி கொண்டு விரதம் இருந்தால் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அதேபோல், குழந்தை இல்லாதோர் இங்குள்ள மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி மடி ஏந்தி சாமியாடி வரும் போது மனமுருக வேண்டி கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறுகின்றனர்.
இதனால், நேற்று நடந்த திருவிழாவில் சாமியாடி வரும் போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடி ஏந்தி வேண்டி கொண்டனர்.
- வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடவடிக்கை
வேலூர்:
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு காட்பாடி ெரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் காட்பாடி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
- போலீசாரின் ரோந்து பைக்கை உடைத்ததால் பரபரப்பு
- மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகரில் ஆடி 4-ம் வெள் ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.
இதனையொட்டி நெல்லூர்பேட்டை ஏரிக் கரை பகுதியில் இருந்து பேரணாம்பட்டு சாலை வழியாக மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது புத்தர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 20), மகாவி(29) ஆகியோர் பட்டாசுகளை கொளுத்தி பக்தர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கரக ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பட்டாசு வீசியவர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டிய தோடு, அங்கு நிறுத்தியிருந்த போலீசின் ரோந்து பைக்கை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், மகாவி ஆகியோரை கைது செய்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பேரில் வைத்து எழுந்தருளினார்.
இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்கா ரங்களும் பூஜை களும் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டு தேரில் எழுந்தருளினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரு தேரோட்ட நிகழ்ச்சி களிலும் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரு இடங்களில் நடந்த தேர் திருவிழாவில் குடியாத்தம் புதுப்பேட்டை, பிச்சனூர், காளியம்மன பட்டி, சாமியார்மலை உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
தெருக்களில் வண்ண விளக்கு களால் அலங்கரி க்கப்பட்டு பல இடங்களில் அன்னதான மும் தண்ணீர் பந்தலும் அமைக்க ப்பட்டுள்ளது.
காளியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் ராட்சதமாலைகள் டிராக்டரில் வைத்தும் பொக்லைன் எந்திரத்தில் வைத்தும் கொண்டு வந்து அம்மனுக்கு அணிவித்தனர்.
இரு நிகழ்ச்சிகளிலும் கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள், விழா குழுவினர், திருப்பணி கமிட்டியினர், நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு, அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






