என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி கைதிகள் 2 பேர் விடுதலை
    X

    சுதந்திர தினத்தையொட்டி கைதிகள் 2 பேர் விடுதலை

    • தண்டனை குறைத்து விடுதலை செய்யப்பட்டனர்
    • ஜெயிலில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதிய தொகை வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொன்னுசாமி என்கிற சித்திக் (வயது 77)

    ஜாகிர் உசேன் (50) இருவரும் தண்டனை குறைப்பு பெற்று நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை விடுவிப்பதற்கான சான்றுகளை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் வழங்கினார்.

    மேலும் அவர்கள் சிறையில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதியத்துக்கான தொகையினையும் வழங்கினார்.

    இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமையில், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்வின் போது உதவி சிறை அலுவலர் அருள்குமரன் சிறை கண்காணிப்பு உதவி ஆய்வாளர் டி.மீனாட்சிசுந்தரம் தலைமை காவலர் கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×