search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
    X

    வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள காரியமண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த காட்சி.

    ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வேலூர்:

    இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

    இது போன்ற விரத நாட்களில் முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    அதன்படி ஆடி அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்க ரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    விரதம்

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    ஆடி அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தது.

    மாத தொடக்கத்தில் வந்த அமாவாசை விட, இன்று அமாவாசை தினத்தில் அதிகமானோர் அமாவாசை தினத்தை கடைப்பிடித்து விரதம் இருந்து வழிபட்டனர். அமாவாசையை யொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×