search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarpanam to the ancestors"

    • ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்
    • திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் வழிபாடு

    வேங்கிக்கால்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு ஏற்றதாகும். மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூற வேண்டும். மேலும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

    சாதாரண அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது 3தலைமுறை முன்னோர்களை சென்று சேரும். மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகும்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான இன்று காலை ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம், கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம் உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வேலூர்:

    இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

    இது போன்ற விரத நாட்களில் முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    அதன்படி ஆடி அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்க ரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    விரதம்

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    ஆடி அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தது.

    மாத தொடக்கத்தில் வந்த அமாவாசை விட, இன்று அமாவாசை தினத்தில் அதிகமானோர் அமாவாசை தினத்தை கடைப்பிடித்து விரதம் இருந்து வழிபட்டனர். அமாவாசையை யொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வேலூரில் தை அமாவாசையொட்டி நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தை அமாவாசை யொட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    தை அமாவாசையொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்க ரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×