என் மலர்
வேலூர்
- சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார்.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவரால் சரியாக பேச முடியாது. காதும் கேட்காது. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா என்பவர் வந்தார்.
சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை கடத்தி சென்ற பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது.
பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.
கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பத்மா போலீசில் சிக்காமல் இருக்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் பஸ் மூலம் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். அவர் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரத்தில் பத்மாவின் கணவரும் சுற்றித் திரிந்ததுள்ளார். பத்மா காஞ்சிபுரம் செல்லும் நேரத்தில், அவரது கணவர் தயார் நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
- குடிபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கரடிகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கலையரசி (31) என்ற மனைவியும், 3 மகன்கள் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.
அதன்படி சரவணன் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணன், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கலையரசி மார்பில் குத்தினார்.
வலி தாங்க முடியாமல் கலையரசி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த கலையரசியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போக்சோவில் வழக்கு பதிவு
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். குடியாத்தம் அடுத்த கொட்டாற மடுகு நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). இளம் பெண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரது வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது இளம் பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியாக உள்ள தனது மகளை சேம் பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்துச் சென்றார்.
அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர் மைனர் பெண் கர்ப்பமாக உள்ளது குறித்து சமூக நலத் துறைக்கு தகவல் அளித்தார்.
சமூக நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சியாமளா போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர், தொரப்பாடி யை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21).
இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுகந்தன் நேற்று இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் அரியூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனிக்காமல் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சுகந்தன் ரெயில் அருகே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுகந்தன் உள்ளிட்ட நண்பர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அதற்குள் வேகமாக வந்த ரெயில் சுகந்தன் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த சுகந்தனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிகிச்சை பலனின்றி பறிதாபம்
- ஒருவர் கைது
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). மேளம் அடிக்கும் தொழிலாளி.
இவர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் வசித்து வந்தார். கடந்த 9-ந் தேதி காகிதப்பட்டறையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கொள்வதற்காக ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.
அப்போது ஆகாசுக்கும் காகிதப்பட்டரையை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மது பாட்டிலை உடைத்து ஆகாஷ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வேலூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- அம்மன் திருவீதி உலா நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் நடக்கும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-வது நாளான நேற்று எல்லையம்மன் மாவடி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி, 5 முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது.
சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் துணிகரம்
- கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
தெப்பல் உற்சவம் நடந்தது. இதி ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36), திவ்யஸ்ரீ (28) தம்பதி குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தனர்.
தொடர்ந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து போது திவ்யஸ்ரீயின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் நகை திருடியவர் யார் என கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதேபோல் மற்றொரு பெண்ணிடம் 3 பவுன் நகையும், மூதாட்டியிடம் பணப்பையையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக - ஆந்திரா எல்லையோரம் சூதாட்டம்
- ரூ.52 லட்சம் பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும்,
இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவ தாகவும் தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் குடியாத் தம் அருகே உள்ள தமிழக-ஆந் திர மாநில எல்லையோர முள்ள சைனகுண்டா கிரா மம் அருகே ஒரு மாந்தோப் பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண் ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்து சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப் பிரண்டு (பயிற்சி) பிரசன்னகு மார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் பைக்கில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.
அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
17 பேரை போலீசார் பிடித்த னர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் 2 பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பணத்தை குடியாத் தம் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் எடுத்து வந்து எண்ணப்பட் டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.
மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்ற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனி வாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்தரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய் தனர்.
ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும்.
குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறு வதாகவும், காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
- பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவர பராமரிக்க வேண்டும்
- கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய அறிவுறுத்தல்
வேலூர்:
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் எஸ்பி மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவரபரா மரிக்க வேண்டும்.
மேலும், புகார் மனு அளிக்க வருபவர்களை, போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக் கள் குறித்து கேட்டறிந்தார். அதன் மீதான உடனடி விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளை விரைந்து விசாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன
- அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த பேரூராட்சிகளின் வேலூர் மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜிஜாபாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனை அடுத்து வேலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா, கூடுதல் பொறுப்பாக உதவி இயக்குனர் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஆலங்காயம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செ.கணேசன் பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
- டிரைவர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு வட்டாரபோக் குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.
ஆட்டோ வில் அதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது. அதேபோன்று பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்டது என்று அதிவேகத்தில் ஆட்டோவை இயக்ககூடாது. மாணவர்கள் ஆட்டோவில் பயணிக்கும் போது வேகமாக சென்று பிறவாகனங்களை முந்தி செல்லவோ, வளைவு களில் வேகமாகவோ செல் லக்கூடாது.
ஆட்டோவில் தகுதிச்சான்று, பதிவுச்சான்று, ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங் களை வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு உட்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற நவம்பர் 10-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
வீர தீர செயல்புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட் பட்ட பெண் குழந்தை களை சிறப்பிக்கும் வகையில், மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியான 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து நவம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இதற்கான விண்ணப்பங் களை மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் பி-பிளாக் சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உத வுதல், பெண் குழந்தை தொழிலா ளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், பெண்க ளுக்கு எதிரான சமூக அவ லங்கள், மூட நம்பிக்கை உள்ளிட்ட வைக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதை, கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விருதுக்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






