என் மலர்
வேலூர்
- வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் துணிகரம்
- கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
தெப்பல் உற்சவம் நடந்தது. இதி ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36), திவ்யஸ்ரீ (28) தம்பதி குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தனர்.
தொடர்ந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து போது திவ்யஸ்ரீயின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் நகை திருடியவர் யார் என கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதேபோல் மற்றொரு பெண்ணிடம் 3 பவுன் நகையும், மூதாட்டியிடம் பணப்பையையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக - ஆந்திரா எல்லையோரம் சூதாட்டம்
- ரூ.52 லட்சம் பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும்,
இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவ தாகவும் தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் குடியாத் தம் அருகே உள்ள தமிழக-ஆந் திர மாநில எல்லையோர முள்ள சைனகுண்டா கிரா மம் அருகே ஒரு மாந்தோப் பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண் ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்து சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப் பிரண்டு (பயிற்சி) பிரசன்னகு மார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் பைக்கில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.
அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
17 பேரை போலீசார் பிடித்த னர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் 2 பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பணத்தை குடியாத் தம் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் எடுத்து வந்து எண்ணப்பட் டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.
மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்ற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனி வாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்தரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய் தனர்.
ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும்.
குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறு வதாகவும், காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
- பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவர பராமரிக்க வேண்டும்
- கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய அறிவுறுத்தல்
வேலூர்:
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் எஸ்பி மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவரபரா மரிக்க வேண்டும்.
மேலும், புகார் மனு அளிக்க வருபவர்களை, போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக் கள் குறித்து கேட்டறிந்தார். அதன் மீதான உடனடி விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளை விரைந்து விசாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன
- அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த பேரூராட்சிகளின் வேலூர் மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜிஜாபாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனை அடுத்து வேலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா, கூடுதல் பொறுப்பாக உதவி இயக்குனர் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஆலங்காயம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செ.கணேசன் பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
- டிரைவர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு வட்டாரபோக் குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.
ஆட்டோ வில் அதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது. அதேபோன்று பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்டது என்று அதிவேகத்தில் ஆட்டோவை இயக்ககூடாது. மாணவர்கள் ஆட்டோவில் பயணிக்கும் போது வேகமாக சென்று பிறவாகனங்களை முந்தி செல்லவோ, வளைவு களில் வேகமாகவோ செல் லக்கூடாது.
ஆட்டோவில் தகுதிச்சான்று, பதிவுச்சான்று, ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங் களை வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு உட்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற நவம்பர் 10-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
வீர தீர செயல்புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட் பட்ட பெண் குழந்தை களை சிறப்பிக்கும் வகையில், மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியான 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து நவம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இதற்கான விண்ணப்பங் களை மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் பி-பிளாக் சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உத வுதல், பெண் குழந்தை தொழிலா ளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், பெண்க ளுக்கு எதிரான சமூக அவ லங்கள், மூட நம்பிக்கை உள்ளிட்ட வைக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதை, கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விருதுக்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.2.80 லட்சம் வசூல்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு வேலூர் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலை த்துறை செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் தக்கார் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 மாதத்தில் ரூ. 2.80 லட்சம் காணிக்கை பணம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் நடக்கிறது.
முதல் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, 3 முறை குலத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவர் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பில் மோதியது.
இதில் கார் முன்பகுதி சேதமானது. காரில் பயணம் செய்த 3 பேர் லேசான காய்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
- ரத்தசோகையால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கிறது
- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
அன்றைய தினம் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணி தாய்மார்கள் மற் றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்கமாத் திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங் கள், அங்கன்வாடி மையங் கள், பள்ளிகள் மற்றும் கல்லூ ரிகளில் நடத்தி குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக் கியம் மேம்படுவதுடன் ஊட் டச்சத்து குறைபாடு இல்லா மல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிக ரிக்கவும் உதவுகிறது.
ரத்த சோகை பிரச்சினை இருக்காது. மேலும் ரத்தசோகை யால் ஏற்படும் பின்விளைவு களில் இருந்து பாதுகாக்கிறது.
வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 3,51,998 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 1,03,112 பெண்களுக்கும் என மொத் தம் 4,55,110 பேருக்கு, மாவட்டத்தில் 7,68,762 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தாகவும் சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
- சத்துவாச்சாரியில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது
- சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்ட லத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே கடந்த சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியில் விளையாடி க்கொண்டிருந்த சிறுவர்கள், இது பொது மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை என்பதால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க பள்ளம் ஏற்பட்டுள்ள வழியே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிறுவர்களே தங்கள் கை பட ஒரு அட்டையில் "இங்கு பள்ளம் உள்ளது, வழி இல்லை. மாற்று பாதையில் செல்லவும்" என்பதை வலியுறுத்தும் வகையில் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகளை வைத்து ள்ளனர்.
அதோடு மட்டும் இல்லாமல் நீண்ட நேரமாக அங்கு நின்று அவ்வழி யாக வரும் வாகன ஓட்டுகளுக்கு அறிவுறுத்தியும் உள்ளனர்.
பள்ளி சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது.
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 65) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு கடந்த 4 வருடத்திற்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அறுவைசிகிச்சை செய்துள்ளார்.
மேலும் கடந்த 10-ந் தேதி மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே வெங்கடேசன் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார் மேலும் இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






