என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து மூதாட்டி சாவு
    X

    பாம்பு கடித்து மூதாட்டி சாவு

    • தூங்கிக்கொண்டிருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 76). இவரது மனைவி ரேவதி(68).

    தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் இறந்துவிட்டார்.

    இதனையடுத்து ரேவதி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேவதி தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதியாக ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ரேவதியை கடித்துவிட்டு அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது.

    வலி தாங்க முடியாமல் ரேவதி கூச்சலிட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதில் நேற்று முன்தினம் ரேவதியின் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயும் பாம்பு கடித்து உயிர் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×