என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு
    • வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வு

    மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பில் விண்ணப்பித்த வர்களுக்கான முதற்கட்ட எழுத்துத்தேர்வு வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடை பெறவுள்ளது.

    அதன்படி, வேலூர் மாவட் டத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

    ஆகஸ்ட் 26-ந் தேதி பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலையில் நடக்கிறது. அதில் மொத்தம் 7,613 பேர் பங்கேற்கின்றனர்.

    அன்றைய தினம் பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல் தேர்வு 70 மதிப்பெண்கள்தேர்வு நடைபெற உள்ளது.

    பாதுகாப்பு பணி

    தொடர்ந்து, மறுநாள் 27-ந் தேதி போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர்.

    வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தேர்வு பணியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோனி இவரது மனைவி ஷைனி.

    இவர்கள் வீட்டில் நேற்று தனது குடும்பத்துடன் இருந்த போது திடீரென பாம்பு நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பாம்பை பிடித்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்
    • தரமான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் 24 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தயார் செய்யப்படும் 20 லிட்டர், 5 லிட்டர், ஒரு லிட்டர் கேன்களில் தண்ணீர் நிரப் பப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கேன்களில் விற்பனை செய்யப்ப டும் குடிநீர் சில இடங்களில் தரமற்று இருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவ னங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப் பட்டு, அவற்றை சரிசெய்ய வேண்டும் என அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரமான குடிநீரை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்றனர்.

    • 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்
    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலுார் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள 52 திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

    அங்கு மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை தரம்பிரித்து, அதில் ஈரப்பதம் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு, 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்.

    இந்த மையங்களில், மாதத்திற்கு 25 முதல் 30 டன் வரை இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை நுண்ணுயிர் உரம், விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

    திடக்கழிவு மேலாண்மை நிலையங்களில் கிட்டத்தட்ட 250 டன் இயற்கை உரம் தயார் நிலையில் உள்ளது. இப்போது வீட்டு தோட்டங்களில் செடிகள் வளர்க்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேரில் வந்து உரத்தை இலவசமாக பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.

    • கொலை மிரட்டல் விடுத்ததை அதிமுகவினர் ரசித்தனர்
    • குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் குடியாத்தம் அமுலு விஜியன் எம்.எல்.ஏ. தலைமையில் மேயர் சுஜாதா வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்ட திமுகவினர் மனு அளித்தனர்.

    அதில் கூறி இருப்பதாவது, மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி. கனிமொழி கருணாநிதி ஆகியவர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் பாட்டு பாடியும் பேசி கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதை முன் வரிசையில் அமர்ந்து அனைத்து அதிமுக தலைவர்களும் அதனை ரசித்து ஏளனமாக கைத்தட்டி சிரித்து வந்தனர்.

    லட்சக்கணக்கான அதிமுகவின் தொண்டர்கள் முன்னிலையில் இப்படி பேசியது மட்டுமல்லாமல் அதனை அவர்களது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள்.

    பொதுவெளியில் அரசியல் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும், உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும், அவதூராகவும் அநாகரிகமாகவும் கொலை மிரட்டல் விடுத்து வேண்டுமென்றே பேச வைத்து பாட்டு பாட வைத்து அதனை ரசித்த அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீது பொது நலனுக்கு குந்தகம் மற்றும் மேற்படி சட்டத்துக்கு புறமான செயலை செய்த நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • சீமை கருவேல மரங்களை அகற்றினர்
    • கரைகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு விடுகிறது.

    இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்ட ர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து, நெல்வாய் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். அதன்படி தொண்டு நிறுவனத்துக்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கினார்.

    அதன்படி ஏரியில் உள்ள சீமை கருவள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கருவேல மரங்கள் முழுவதாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியகுழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், உடன் இருந்தனர்.

    • பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடு பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் மாணவி இன்று பள்ளிக்கு வரவில்லை.

    மேலும் இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

    இதனால் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி தடை
    • மின் அதிகாரி தகவல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்துவாச்சாரி பேஸ் - 1, 2, 3, 4, 5 மற்றும் அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • ரூ.71.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டது
    • நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், ஹோட்டல், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்-தார்சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ரூ.71.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது, விமான நிலையத்திற்கு தடுப்பு வேலி, உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், விமான நிலையத்திற்கு செல்லும் சாலை, இரு வழி சாலையாக உள்ளது.

    விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், 2 வழி சாலையை, 4 வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, 4 வழி சாலையாக மாற்ற ரூ.71.80 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    • அதிகாரிகள் தகவல்
    • சிறுதானியங்களையும் விற்பனை செய்தனர்

    வேலூர்:

    வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற் பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத் திற்கு வேலூர், அணைக் கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம் பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவ யிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மற்றும் உணவு தானியங்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர்.

    நேற்று ஏடிடி, கோ 51, ஹெச்எம்டி, ஆர்.என் ஆர், மகேந்திரா, நர்மதா, அமோகா, ஸ்ரீ, அம்மன், சுவேதா ஆகிய நெல்ரக மூட்டைகள் விற்ப னைக்கு கொண்டு வரப் பட்டது.

    அதேபோல், சிறுதானியங்களான மணிலா, கொள்ளு, கேழ் வரகு, கம்பு, உளுந்து, மணி பூவங்காய், தேங் காய் ஆகியவற்றை விவ சாயிகள் விற்பனை செய்தனர்.

    இதற்கிடையில், இன்று காலை முதல் வேலூர், அணைக்கட்டு, சோழவ ரம், ஊசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசா யிகள் நெல் மூட்டைகள் விற்பனை செய்ய வேலூர் ஒழுங்கு முறை விற்பனைகூடத்திற்கு அதிகளவில் கொண்டு வந்தனர்.

    தற்போது நெல் ரகங்களுக்கு அதிக விலை கிடைப்ப தால், விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வருவ தாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வியாபாரிகள் குவிந்தனர்
    • கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை என்றும் மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட் டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.

    உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப் பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை யில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடு கள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடு கள், ஜெர்சி கலப்பின பசுக் கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்ப னைக்கு வந்தது.

    இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மனைவி போலீசில் புகார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அருகே உள்ள உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44), கூலித் தொழிலாளி.

    இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றார்.

    அப்போது, நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தம் பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்டபாணி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×