என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
    X

    பொய்கை மாட்டு சந்தை நடந்த காட்சி.

    பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

    • வியாபாரிகள் குவிந்தனர்
    • கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை என்றும் மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட் டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.

    உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப் பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை யில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடு கள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடு கள், ஜெர்சி கலப்பின பசுக் கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்ப னைக்கு வந்தது.

    இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×