என் மலர்
நீங்கள் தேடியது "24 companies are functioning"
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்
- தரமான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் 24 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தயார் செய்யப்படும் 20 லிட்டர், 5 லிட்டர், ஒரு லிட்டர் கேன்களில் தண்ணீர் நிரப் பப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கேன்களில் விற்பனை செய்யப்ப டும் குடிநீர் சில இடங்களில் தரமற்று இருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவ னங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப் பட்டு, அவற்றை சரிசெய்ய வேண்டும் என அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரமான குடிநீரை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்றனர்.






