என் மலர்
நீங்கள் தேடியது "Bring and sell variety of paddy and food grains"
- அதிகாரிகள் தகவல்
- சிறுதானியங்களையும் விற்பனை செய்தனர்
வேலூர்:
வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற் பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத் திற்கு வேலூர், அணைக் கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம் பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவ யிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மற்றும் உணவு தானியங்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர்.
நேற்று ஏடிடி, கோ 51, ஹெச்எம்டி, ஆர்.என் ஆர், மகேந்திரா, நர்மதா, அமோகா, ஸ்ரீ, அம்மன், சுவேதா ஆகிய நெல்ரக மூட்டைகள் விற்ப னைக்கு கொண்டு வரப் பட்டது.
அதேபோல், சிறுதானியங்களான மணிலா, கொள்ளு, கேழ் வரகு, கம்பு, உளுந்து, மணி பூவங்காய், தேங் காய் ஆகியவற்றை விவ சாயிகள் விற்பனை செய்தனர்.
இதற்கிடையில், இன்று காலை முதல் வேலூர், அணைக்கட்டு, சோழவ ரம், ஊசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசா யிகள் நெல் மூட்டைகள் விற்பனை செய்ய வேலூர் ஒழுங்கு முறை விற்பனைகூடத்திற்கு அதிகளவில் கொண்டு வந்தனர்.
தற்போது நெல் ரகங்களுக்கு அதிக விலை கிடைப்ப தால், விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வருவ தாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.






