என் மலர்tooltip icon

    வேலூர்

    • அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தனர்
    • மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்

    வேலூர்

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 3,304 பள்ளிகளில் 1.88 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    காலை உணவுக்கான சமையல் கூடங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதியில் உள்ள 24 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் உள்ள 528 பள்ளிகள் என மொத்தம் 576 பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரத்து 721 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்ைத நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.

    • மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • 50-க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் ஏரியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை
    • பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற்றனர்

    வேலூர்:

    தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், செல்வ வளம் பெருகவும், சகல ஐஸ்வரியங்களையும் பெறவும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுளர்ணமி தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது .

    திருமணமான பெண்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தைக் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று காலை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்ட 9 மணி முதல் 10.30 மணிக்குள் பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    பெண்கள் கலசம் செய்து அதனுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு உள்ளிட்டவர்களை வைத்து சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியத்தை படையலிட்டு நோம்பு இருந்தனர்.

    மேலும் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி உள்ளிட்டவர்களை கொடுத்து ஆசி பெற்றனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்
    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட வன அலுவலர் கலாநிதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது:-

    லத்தேரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காய்கறிகள் வாரச்சந்தை நடக்கிறது. திறந்தவெளியில் காய்கறி கடைகள் இருப்பதால் வியாபாரிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதி அடைகின்றனர். எனவே வார சந்தை கடைகளுக்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும்.

    உள்ளி ஊராட்சியில் பாலாற்றில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்.

    சிவில் சப்ளை குடோனில் இருந்து குடியாத்தம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு சரிவர பொருட்கள் அனுப்புவதில்லை. இதனால் பாதி பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    மேலும் தரமற்ற பொருட்கள் அனுப்புவதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சீவூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடுரோட்டில் நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    திப்பசமுத்திரம் கிராமத்தில் செல்லும் மலட்டாறில் அதிக அளவு மணல் கொள்ளை நடக்கிறது. மணல் அள்ளும் இடத்தில் மேடு, பள்ளம் அதிகமாக இருப்பதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது.

    லத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சரிவர 3 பேஸ் மின் இணைப்பு வரவில்லை. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.

    ஒய்யாத்தூர் ஏரியிலிருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் மூலம் வண்டல் மண் அள்ளப்படுகிறது.

    அவர்களிடத்தில் சென்று கேட்டால் அரசு பணிக்கு எடுப்பதாக கூறுகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் எப்படி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.

    அதனை விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சூர் பாலாற்றில் கட்டப்பட்டு வரும் சிறிய தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

    பேரணாம்பட்டு ஏரியில் தோல் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலக்கிறது. இதனால் மண் வளம் அதிகம் பாதிப்பு அடைகிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பெயரில் காட்பாடி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் சுஷ்மிதா மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.14 லட்சம், 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி இருந்தது
    • அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் ஒன்றான வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சிறப்பு திருவிழா நடைபெறும்.

    இங்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப கோழி உருவங்கள், பணம், தங்கம், வெள்ளி போன்றவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்க்கு பிறகு நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார் , குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், பக்தர்கள் ரூ. 14 லட்சத்து 6 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் நேரடியாக 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
    • குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை, மாசிலா மணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

    இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் சரத்குமார் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவராஜிக்கும், சரத்குமாருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த தேவராஜியின் மனைவி மற்றும் மகள் அலறியடித்துக்கொண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று தேவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.

    குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன
    • மதுக்கடைகளை மாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலுார்:

    வேலுார் மாநகரில் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் மது அருந்தும் கும்பல், அந்தவழியாக செல்பவர்களிடம் போதையில் கலாட்டா செய்வதும் வாடிக்கையா கிவிட்டது.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இனிமேல் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு தகராறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    வேலுாரில், ஆற்காடு சாலையில் மட்டும் மொத்தம் 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில், மாலை 6 மணிக்கு மேல் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிடுகிறது.

    டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிவிட்டு சாலையோரத்தில் உள்ள கடைகள், விடுதிகள்,காலி இடங்கள் என எல்லா இடங்களிலும் சாவகாசமாக அமர்ந்து குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.

    இதனால், அப்பகுதி வழியாக மக்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பகுதிகளில் பெரும்பாலும் சி.எம்.சி-க்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தங்கியுள்ளனர். குடிபோதையில் அவர்களை தாக்குவது, பெண்களை கேலி செய்வதும் அதிகரித்து விட்டது.

    குறிப்பாக, 'எலைட்" எனப்ப டும் வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யும் கடைக்கு அருகே உள்ள வீடுகளின் வாசல் பகுதிகள் எல்லாம் இரவு 7 மணிக்கு மேல் குடிகா ரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், பலர் வீட்டையே காலி செய்து சென்றுவிட்டனர்.

    இதை கட்டுப்படுத்த போலீசார் இப்பகுதியில் கட்டாய ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்த் உள்ளனர்.

    • பஸ் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆத்திரம்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

    வேலூ:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சுகொண்டாபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    பாகாயம், கணியம்பாடி, பெரிய பாலம்பாக்கம், ஏ.டி.காலனி, அருந்ததியர் காலனி, கிருஷ்ணாவரம் வழியாக செல்லும் இந்த அரசு பஸ் வழித்தடம் கடந்த சில நாட்களாக மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நஞ்சுண்டாபுரம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.

    ஆனால் பஸ் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யும் வளர நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலூரில் நாளை நடக்கிறது
    • கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அழைப்பு

    வேலுார்:

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

    வேளாண், பொறியியல், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து உட்பட எல்லாதுறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

    எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்
    • மறைமுக தேர்தல் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 8-வது வார்டு உறுப்பினர் குப்புசாமி என்பவர் பதவி வகித்து வந்தார்.

    அவர் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இந்தநிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று மறைமுக தேர்தல் நடந்தது.

    இதில் 7-வது வார்டு உறுப்பினர் ரேணு என்பவர் மட்டும் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    மேலும் அவரைத் தொடர்ந்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

    • பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம்
    • பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் ஒரு மாணவி ஆசிரியர் ராமன் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயன்றதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் ராமனிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியை அகிலா தகவல் தெரிவித்தார்.

    பள்ளியில் மாணவியிடம், ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தி யில் பரவியது. இதனால் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.அகிலா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.அங்குலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ். அரசு மற்றும் பிரமுகர்கள் பள்ளி வளாகத்தில் விசா ரணை நடத்தினர்.

    தொடர்ந்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமன் சில்மிஷம் செய்ததாக ஏராளமான மாணவிகள் குற்றம் சாட்டினார்கள்.

    மேலும் மாலை வரை போராட்டம் நடைபெற்றதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம், ஆசிரியர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

    இதனையடுத்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர் பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×