அரசு பஸ் சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்

பஸ் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
அரசு பஸ் சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்
Published on

வேலூ:

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சுகொண்டாபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

பாகாயம், கணியம்பாடி, பெரிய பாலம்பாக்கம், ஏ.டி.காலனி, அருந்ததியர் காலனி, கிருஷ்ணாவரம் வழியாக செல்லும் இந்த அரசு பஸ் வழித்தடம் கடந்த சில நாட்களாக மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நஞ்சுண்டாபுரம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.

ஆனால் பஸ் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யும் வளர நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com