என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keeping the public safe"

    • மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • 50-க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் ஏரியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    ×