என் மலர்tooltip icon

    வேலூர்

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 100 டிகிரி வெயில் பதிவானது. மாலை 5 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 6 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

    அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 32 மில்லி மீட்டர், காட்பாடியில் 32 மில்லி மீட்டர், மேல் ஆலத்தூரில் 30.20 மில்லி மீட்டர், கே.வி. குப்பத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் ஆலங்காயத்தில் 21 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 19 மில்லி மீட்டர், ஆம்பூரில் 14.60 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 9.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிபாக்கத்தில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. பனப்பாக்கத்தில் 48 மில்லி மீட்டர், அம்மூரில் 48 மில்லி மீட்டர், கலவையில் 37.2 மில்லி மீட்டர், வாலாஜாவில் 25 மில்லி மீட்டர், பாலாறு அணைக்கட்டில் 24 மில்லி மீட்டர், ராணிப்பேட்டையில் 21.8 மில்லி மீட்டர், ஆற்காட்டில் 21.2 மில்லி மீட்டர், மின்னல் பகுதியில் 21.2 மில்லி மீட்டர், அரக்கோணத்தில் 18.4 மில்லி மீட்டர், சோளிங்கரில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    இதனால் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் செ.கணேஷ் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், திட்டப் பணிகளின் விவரம், முன்னேற்ற நிலை குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் வரி மற்றும் வரியற்ற இனங்களின் வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்து, வரி வசூல் பணியினை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு பி.எம். சுயநிதி திட்டத்தின்கீழ் வங்கி மூலம் ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

    வருகிற 30-ந் தேதிக்குள் 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்த வழக்கு
    • ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவரது மனைவி ராதாம்மாள் (வயது 71). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.ராதாம்மாள் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார்.

    அவர் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து திடீரென ராதாம்மாளை தாக்கினார். மேலும் அவரது மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேடினர். ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே இருந்த வாலிபரை பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராதாம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் ஜெயக்குமார் தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார்.

    அப்போது போலீசில் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் அங்கு இல்லை. அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் புகார் மனுவை கொடுத்துவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராதாம்மாள் நேற்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராதம்மாளை தாக்கி கொலை செய்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பழனிமுத்து, ரவி, டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். மறியல் காரணமாக வேலூர் ஆற்காடு சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
    • அதிகாரிகள் நேரில் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 34) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசு மாடு வளர்த்து வந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது மாட்டின் கொட்டகைக்கு அருகில் உள்ள தென்னை மரம் மீது இடி விழுந்தது.

    அப்போது அருகில் இருந்த கொட்டகையில் இடி விழுந்தது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாடு இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்ததை அந்த பகுதி மக்கள் பார்வையிட்டு தங்கள் செல்போனில் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், கால்நடை பராமரிப்புத் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    இடி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியது.

    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், குடி பழக்கத்திற்கு அடிமையான குமார் நாள்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.

    இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார் குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி பானுப்பி ரியா கண்டித்துள்ளார்.

    இதனால், மனவேத னையடைந்த குமார் யாருக்கும் தெரியா மல் விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் அருள், வேலூர் மாவட்ட தலைவர் கெஜராஜ், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

    8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எப், பே சிலிப் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காவலாளி கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதே போல அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த 3 கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்
    • முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கியது.

    இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 7,613 எழுதினர்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக தேர்வு மைய நுழைவாயிலில் முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் பென்சில் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

    இன்று பிற்பகல் பொதுப் பிரிவினருக்கு மட்டும் 70 மதிப்பெண்ணுக்கான பொதுஅறிவு மற்றும் உளவியல் தேர்வு நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து நாளை போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

    இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர். இன்று வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தில் நடந்த தேர்வில் வேலூர் சரக டிஐஜி முத்து சாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்ப்பார்வையில் 3 ஏ.டி.எஸ்.பி.கள், 5 டி.எஸ்.பி.கள், போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்.

    • ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாம்பல் செருவு ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அரசின் காலை உணவு திட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி, பாரதிராஜா, வயலட் மகேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குண்டல பள்ளி ஏ.எஸ்.ராஜி சிவகுமார் ஊராட்சி செயலாளர் சி அனிதா ஃபுல் படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.

    திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.

    அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

    இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.

    அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.

    கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பொதுமக்கள் அவதி
    • குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்

    வேலூர்:

    கோடைகாலம் முடிந்த போதிலும் வேலூரில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த சில நாட்கள் மழை பெய்து குளிர்ச்சியை தந்தது. இந்நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்தில் 100.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

    இதனால் மக்கள் மீண்டும் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்
    • ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை

    வேலூர்:

    ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும்.

    இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் 1000-க்கும்மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது.இன்று ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு ஆடு 20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. அதன் படி இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    ×