search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கல்லூரி மாணவிகள் மாயம்
    X

    3 கல்லூரி மாணவிகள் மாயம்

    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காவலாளி கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதே போல அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த 3 கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×