என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாள்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கம்"

    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், குடி பழக்கத்திற்கு அடிமையான குமார் நாள்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.

    இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார் குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி பானுப்பி ரியா கண்டித்துள்ளார்.

    இதனால், மனவேத னையடைந்த குமார் யாருக்கும் தெரியா மல் விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×