search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் திருவிழாவில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் குத்திக் கொலை- அண்ணன், தம்பி கைது
    X

    கோவில் திருவிழாவில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் குத்திக் கொலை- அண்ணன், தம்பி கைது

    • அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.

    திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.

    அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

    இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.

    அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.

    கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×