search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
    X

    மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

    • குடிபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கரடிகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கலையரசி (31) என்ற மனைவியும், 3 மகன்கள் உள்ளனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

    அதன்படி சரவணன் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணன், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கலையரசி மார்பில் குத்தினார்.

    வலி தாங்க முடியாமல் கலையரசி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த கலையரசியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×