என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
    X

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடந்த போது எடுத்த படம்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் நடக்கிறது.

    முதல் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, 3 முறை குலத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×