தொழிலாளி மர்ம சாவு

மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்போலீசார் விசாரணை
தொழிலாளி மர்ம சாவு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரதாப் தனது குடும்பத்தினரை பணிந்து, வேப்பங்குப்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். கள்ள காதலிக்கும், பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஊசூர் அருகே உள்ள ரெண்டேரிகொடி ஏரியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com