search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் சுதந்திர தின விழா
    X

    சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய போது எடுத்த படம்.

    குடியாத்தத்தில் சுதந்திர தின விழா

    • நகர மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பொறியாளர் வே.சம்பத், மேலாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    தேசியக்கொடியை நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஏற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமலுவிஜயன் எம்எல்ஏ கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளூர்ரவி, ஏகாம்பரம், நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, கோவிந்தராஜ், மனோஜ், பாபு, நவீன்சங்கர், ஜாவித்அகமது, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×