search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் வாலிபர் சாவு
    X

    பைக் விபத்தில் வாலிபர் சாவு

    • மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த வெங்கடாபுரம் வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது17). இவர் நேற்று பாலமதி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி சசிகுமார் கீழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×