search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் மாடு திருடி சென்ற கும்பல்
    X

    நள்ளிரவில் மாடு திருடி சென்ற கும்பல்

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வைரல்
    • பேட்டரியையும் திருடி சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாநகரம், காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

    சாலைகளை சுற்றி திரியும் மாடுகளை மர்ம கும்பல் வாகனத்தில் வந்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கும் மாடுகளை திருடி சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி சாலையில் உள்ள காகிதப்பட்டறை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சாலையில் மாடுகள் படுத்திருந்தன கொண்டிருந்தது.

    இதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல்கள் நோட்டமிட்டு மாடுகளை திருடி சென்றது.

    இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள சோளாபுரி அம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை மர்ம கும்பல் திருடி சென்றனர்.

    பேட்டரி திருடி செல்லும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×