search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு வேலூர் மீன் வியாபாரி பலி
    X

    ரெயிலில் அடிபட்டு வேலூர் மீன் வியாபாரி பலி

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லா புரத்தை சேர்ந்தவர் முகமது (வயது30). மீன் வியாபாரம் செய்து வந்தார் . இவர் இன்று அதிகாலை பென்னாத்தூர் பகுதியில் மீன் வியாபாரத்திற்கு சென்றார்.

    அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×