search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boy died"

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு பணியாற்றி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமாக ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    அந்த தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்கியது.

    தொழிற்சாலையில் பணிபுரியும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

    ஊதுபத்தி மாவு கலக்கும் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது.

    கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா. தம்பதியினருக்கு கிஷோர் ( வயது 3) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    கவுசல்யா நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார்.

    வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது கிஷோர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரைச் சேர்ந்தவர்
    • ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற போது பரிதாபம்

    ஜோலார்பேட்டை

    வேலூர் அடுத்த செதுவாலை புதுமனை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாண்டிலியன் (வயது 37). இவர் மனைவி, மகன் ஹரிஹரன் ( 7) மற்றும் உறவினர்களுடன் வேலூரில் இருந்து நேற்று காலை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். ஆட்டோவை சாண்டிலியன் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த மண்டலவாடி கூட்டு ரோடு அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் இருந்து திடீரென ஹரிஹரன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறுவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவனின் தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×