என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு அடி-உதை"

    வடமதுரையில் சண்டையை விலக்கி விடாத வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் முள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்னம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது24), மாரீஸ் (28) ஆகியோர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் மணிமாறன் சென்று விட்டார். இதனையடுத்து தங்களது வாகனத்தில் துரத்தி சென்ற இருவரும் மணிமாறனை மறித்து நாங்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளோம்.

    விலக்கி விடமாட்டாயா என அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிமாறன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் மற்றும் மாரீசை கைது செய்தனர்.

    • இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பி.டி.சி. ரோடு வாணி தெருவைச் சேர்ந்த சிவாஜி மகன் வினோத்குமார். இவர் தனது மாமியார் ஊரான திருவலம் இ.பி கூட்ரோட்டில் நடந்த திருவிழாவை காண சென்றார்.

    சாமி வழிபாடு செய்த பொழுது அவரது மாமியார் சாமி வந்து ஆடினார். வினோத்குமார் அதை வீடியோ எடுத்த பொழுது திருவலம் இ.பி கூட்ரோட்டுச் சேர்ந்த சரவணன் என்கிற சரவண வேல் என்பவர் இங்கு பெண்களை வீடியோ எடுக்க கூடாது என்று கூறினார்.

    வினோத்குமார் எனது மாமியாரை தான் நான் வீடியோ எடுக்கிறேன். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

    இதில் சரவணன் வினோத்தை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத்குமார் சரவணன் வீட்டுக்கு சென்று என்னை ஏன் திட்டினாய் என்று கேட்டார்.

    இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரவணன், வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையாளும் இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்ற வினோத் குமார் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    சரவணன் மீது ஏற்கனவே வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி கொலை முயற்சி கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் விசாரணை
    • ஆஸ்பத்திரியில் அனுமதி

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம், சேண்பாக்கம் மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இர வும் அந்த வாலிபர் கொணவட்டம் பெரி யமசூதி அருகே சுற்றியுள்ளார்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வடமாநில வாலிபர், குழந்தையை கடத்தி செல்லும் நபர் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடும் நபராக இருக்கலாம் என்று சந்தே கம் அடைந்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைகளை கட்டி சர மாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வடமாநில வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

    அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த வாலிபர் முத லுதவிக்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் தில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×