என் மலர்
நீங்கள் தேடியது "Old man seriously injured"
- ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து
- ேபாலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70).
இவர் கடந்த 26-ந்தேதி அவ்வூர் வழியாக செல்லும் மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர் தனசேகர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது சுமார் முதியவர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடதுகால் ரெயில் பெட்டி மற்றும் பிளாட்பார கட்டிடத்திற்கு இடையே சிக்கிக்கொண்டது.
ரெயில் நிர்க்காமல் சென்றதில் அவரது கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அடைந்த காட்பாடி போலீசார் விரைந்து சென்று, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






