பஸ் மோதி முதியவர் படுகாயம்

ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து ேபாலீசார் விசாரணை
பஸ் மோதி முதியவர் படுகாயம்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70).

இவர் கடந்த 26-ந்தேதி அவ்வூர் வழியாக செல்லும் மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக உறவினர் தனசேகர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com