search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.13 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
    X

    ரூ.13 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்

    • நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு
    • 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு மாற்றாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் விநாயகபுரம் பயணியர் விடுதி அருகே 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீர் தேக்க தொட்டியும், எம்.பி.எஸ்.நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், அசோக்நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் ஐதர்புரம் பாலாற்று பகுதியில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 9 குடிநீர் சப்ளை செய்யப்படும் கிணறுகளில் இருந்து அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் பைப்புகள் இணைக்கப்பட உள்ளது இந்த குடிநீர் பைப்புகள் இணைக்கும் பாதையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர், சிசில்தாமஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், ரேணுகாபாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    குடியாத்தம் நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் இதனால் குடியாத்தம் நகராட்சி பொது மக்களுக்கு விரைவில் தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.மேலும் தரைதள மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் இதனால் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் என்பது இருக்காது என்றார்.

    Next Story
    ×