search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு மீது பைக் மோதி ஒருவர் சாவு
    X

    மாடு மீது பைக் மோதி ஒருவர் சாவு

    • திடீரென சாலையின் குறுக்கே வந்தது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அடுத்த செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). இவர் தனது பைக்கில் நண்பருடன் காட்பாடியில் இருந்து செங்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப் போது, சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்தது, அதன்மீது ரமேஷ் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக, அங்கி ருந்தவர்கள் படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×