என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு ஒருவர் கைது
- கண்ணில் பலத்த காயம்
- போலீசார் விசாரணை
காட்பாடி:
காட்பாடி செங்குட்டை பகுதியில் கடந்த 21-ந் தேதி ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழாவும், இரவு பாட்டுக் கச்சேரியும் நடந்தது. அப்போது அதே பகு தியை சேர்ந்தமோகன், மணி இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கும், அதே பகுதியை கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், மணி ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். மோகனை தேடி வருகின்றனர்.






