என் மலர்
வேலூர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை
- வேலூர் நகராட்சி, பேரூராட்சிகளில் பணிகள் நடந்து வருகிறது
வேலூர்,
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் குடியாத்தம் நகராட்சியில் ரூ.263.09 லட்சம் மதிப்பீட்டில் 19 சாலை பணிகளும், ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் 3 பூங்காக்களும், ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் 1 மயானமும், ரூ. 219 லட்சம் மதிப்பீட்டில் 1 அறிவுசார்மையமும் என மொத்தம் ரூ.747,09 லட்சம் மதிப்பீட்டில் 24 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பேரணாம்பட்டு நகராட்சியில் ரூ.254,82 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 1 பூங்காவும், ரூ.146 லட்சம் மதிப்பீட்டில் 1 மயானமும் என மொத்தம் ரூ.449.82 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பென்னாத்தூர் பேரூராட்சியில் ரூ.30.11 லட்சம் மதிப்பீட்டில் 1மழைநீர் வடிகால்வாய் பணியும், ரூ.5.09 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்சார வாகனங்கள் என மொத்தம் ரூ.36.20 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும்,
திருவலம் பேரூராட்சியில் ரூ.64.32 லட்சம் மதிப்பீட்டில் 1 மழைநீர் வடிகால் பணி ரூ.7.28 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணி என மொத்தம் ரூ.146,60 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும்,
பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.272,9 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை பணிகளும், ரூ.43.99 லட்சம் மதிப்பீட்டில் 1 மழைநீர் வடிகால் பணியும் ரூ.7.61 லட்சம் மதிப்பீட்டில் 5 மின்சார வாகனங்களும், ரூ.728 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும் என மொத்தம் ரூ.38.378 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகளும்,
ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.523 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.23.8 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.728 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும் என மொத்தம் ரூ.83.38 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும்,
நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.18.47 கோடி மதிப்பில் 48 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போக்குவரத்து நெரிசல்
- வேலூர் காகிதப்பட்டறையில் பரபரப்பு
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதன் காரணமாக சத்துவாச்சாரியில் இருந்து ஆற்காடு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். அந்த வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.
அப்போது வாகனங்கள் ஒரே சர்வீஸ் சாலையில் எதிரும், புதிருமாக சென்றதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.
சர்வீஸ் சாலையை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
- பயிர்கள், டிராக்டரை மிதித்து நாசம் செய்தது
- உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கதிர்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் கதிர்குளம் கிராமத்தை ஒட்டியபடி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை முனிராஜ் என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டம் மற்றும் வேர்க்கடலை தோட்டத்தை சேதப்படுத்தியது.
பாலாஜி என்பவருடைய நெற்பயிர் மற்றும் நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த டிராக்டரையும் மிதித்து பெருமளவு சேதப்படுத்தியது.
இதனை தொடர்ந்து பிச்சாண்டி, கவுரி ஆகியோருக்கு சொந்தமான நெல் மற்றும் மாமரங்களை சேதப்படுத்தியது.
இதனை பார்த்த விவசாயிகள் ஒன்று கூடி பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்ற போது யானை கிராம மக்களை துரத்தியது.
அப்போது கிராம மக்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடி வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானை அடர்ந்த வனப்ப குதிக்குள் சென்றது.
பயிர்க ளுக்கு வனத்து றையினர் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு வனத்துறையினர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
- அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில்லை
- பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார்.
பணிகள் நடக்கவில்லை
தொடர்ந்து, கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா பேசுகையில் :-
எனது வார்டில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைத்து தரும்படி மூன்று மாதமாக கோரிக்கை வைத்தேன். ஆனால் இதுவரை அவை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதுவரை எனது வார்டுக்கு என்ன செய்தீர்கள் என்று செயல் அலுவலரை பார்த்து கேட்டதுடன் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு கூட எனது வார்டில் வேலை செய்ய முடியாதா? என்று அரங்கமே அதிரும் அளவிற்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, குறுக்கிட்டு பேசிய 10-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில்:-
எனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தாலும் அதனை தீர்மானங்களாக நிறைவேற்றுவதில்லை என்று கூறி அஜந்தா நகலை தூக்கி வீசினார்.
பின்னர், இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்து சென்று செயல் அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், அனைத்து குடிநீர் தொட்டிகளில் பூச்சுகள் உற்பத்தியாகி உள்ளதால் அதனை மாதம் தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
அதேபோல், செயல் அலுவலர் பதவியேற்று மூன்று மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்யவில்லை, அப்படி செய்திருந்தால் 3 மாத வரவு, செலவு கணக்கை மன்ற கூட்டத்தில் காண்பிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு
- டாக்டர்களுக்கு பாராட்டு
வேலூர்,
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உடல் உறுப்புகள் தான தின விழிப்புணர்வு விழா ஸ்ரீபுரத்தில் நடந்தது. விழாவுக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி தலைமை தாங்கினார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மருத்துவ கண்காணிப்பாளர் கீதாஇனியன், சுகி மற்றும் டிவைன் குழுமத்தின் இணை இயக்குனர்கள் ஸ்ரீநாத்பாலாஜி, ஸ்ரீகாந்த்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, தமிழ் த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாராயணி மருத்துவமனை சார்பில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினருக்கும், சிறப்பாக பணியாற்றிய மருத்து பணியாளர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பேசியதாவது:-
மக்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு உள்ளது.
ஆனால் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதுதொடர்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் இறந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுக்க முடியும். இறந்த பின்பும் நாம் வாழலாம். மரணத்தின் மூலம் உடல் மண்ணில் புதைக்காமல், மனிதர்கள் மேல் விதையுங்கள்.
மரணத்திற்குப் பின்னரும் நாம் வாழ்வோம். சக்தி அம்மாவின் ஆசியால் நான் வாழ்வில் உயர்ந்துள்ளேன். நானும் உறுப்புகள் தானம் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.
- ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வேலூர்:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.
அங்குள்ள பயிர்களை நாசம் செய்த ஒற்றை யானை விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த, கணவன், மனைவி உள்பட 3 பேரை மிதித்துக் கொன்றது.
தகவல் அறிந்து வந்த ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.
தமிழகம்-ஆந்திரா எல்லை பகுதியான காட்பாடி, பொன்னை, மகிமண்டலம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த யானையை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.
காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.
அங்குள்ள சூளைமேட்டு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி வசந்தா (54).
இவர்கள் வனப்பகுதியில் ஒட்டியுள்ள தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் மற்றும் வசந்தா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒற்றை யானை அவர்களது ஆட்டு கொட்டகைக்குள் புகுந்தது. அதனை கண்டு ஆடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தது. அலறல் சத்தம் கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தார்.
அப்போது ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் ஒரு ஆடு துடிதுடித்து இறந்து போனது.
உடனடியாக வசந்தா கூச்சலிட்டபடி யானையை விரட்ட முயன்றார். பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள், யானை வசந்தாவை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கூச்சலிட்டு யானையை விரட்டினார்.
இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் மற்றும் ஆற்காடு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் யானை விரட்டுவதற்கு உதவியாக ஆந்திரா வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
மூதாட்டி மற்றும் ஆட்டுக்குட்டியை கொன்ற காட்டுயானை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது.
வனத்துறை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒற்றை யானையை தேடி விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள காட்பாடி, பொன்னை, மேல்பாடி, போடி நத்தம் உள்ளிட்ட பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
4 பேரை கொன்ற இந்த ஒற்றை யானையை காட்டுப்பகுதியில் விரட்டுவதா, இல்லை அதனைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதா என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் எந்திரத்துடன் காகிதப்பட்டறைக்கு வந்தனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கருணாகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
மேலும் சாலை யோரத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கடையில் இல்லாதபொருளை கேட்டதால் தகராறு
- போலீசார் கைது செய்தனர்
காட்பாடி:
கழிஞ்சூரை சேர்ந்தவர் அன்பு இவர்ரெயில்வே கேட் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு சேனுர் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 36), அவருடைய தம்பி சதீஷ்குமார் (34) ஆகியோர் கடைக்கு வந்தனர்.
கடையில் இல்லாதபொருளை கேட்டதால் அன்பு இல்லை என கூறினார். உடனே அவர்கள் இருவரும் தகராறு செய்ததால் அன்பு கடையை மூடினார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அன்புவை தாக்கியுள்ளனர். இது குறித்து அன்பு விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று காசிக்குட்டைக்கு செல்லும் சாலை யில் நின்று கொண்டிருந்த சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- டிராக்டர் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திர காவிரி ஆற்றில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 24) என்பதும், இவர் ஆற்றில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
- குடியாத்தம் அருகே சுற்றித்திரிந்ததால் சந்தேகம்
- மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது
வேலூர்:
குடியாத்தம் டவுன், ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம்பட்டியில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்தார்.
இதனால் வட மாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். பொதுமக்கள் வட மாநில வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
மனநலம் பாதிக்கப்பட்டு ரெயிலில் வரும் வட மாநில வாலிபர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம் பட்டியில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது.
அதேபோல் தான் இந்த வாலிபரும் வந்து உள்ளார். மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிந்ததால் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.
- நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை அருகே உள்ள சின்ன நாகல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தீபா என்கிற தேவி (35).
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி, அடிக்கடி மனைவி தீபாவிடம் தகராறு செய்வார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகிலிருந்த விறகு கட்டை எடுத்து, தீபாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த தீபா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்த கயிறை எடுத்துவந்து, தீபாவின் கழுத்தை இறுக்கினார். இதில் தீபா துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- பைக் பறிமுதல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அரிமலை, மலைஅடிவாரத்தில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வருவது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பைக் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை பகுதியை சேர்ந்த உலகநாதன் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.






