search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
    X

    வட மாநில வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

    • குடியாத்தம் அருகே சுற்றித்திரிந்ததால் சந்தேகம்
    • மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது

    வேலூர்:

    குடியாத்தம் டவுன், ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம்பட்டியில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    இதனால் வட மாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். பொதுமக்கள் வட மாநில வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    மனநலம் பாதிக்கப்பட்டு ரெயிலில் வரும் வட மாநில வாலிபர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம் பட்டியில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது.

    அதேபோல் தான் இந்த வாலிபரும் வந்து உள்ளார். மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிந்ததால் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.

    Next Story
    ×