என் மலர்tooltip icon

    வேலூர்

    • வி.ஐ.டி.யில் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா
    • அறிவியல் தொழில்நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேச்சு

    வேலூர்:

    விஐடி பல்கலைக்க ழகத்தில் 14-வது ஆண்டாக அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று தொடங்கியது.

    இதில் 150 க்கும் மேற்பட்டதொழில்நுட்ப பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    அறிவுசார் திருவிழா

    இதில் 13000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியில் சிறப்பான படைப்புகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

    அறிவு சார் தொழில்நுட்ப திருவிழாவை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

    வி.ஐ.டி.யில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 நாடுகளில் இருந்து படித்து வருகிறார்கள்.

    கடந்தாண்டு 400-க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்தியாவில் அரசு பள்ளிகளில் 14 வயது வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

    ஆனால் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுவதில்லை.உலகின் உள்ள 25 நாடுகளில் பல்கலைக்கழக அளவில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக ஜெர்மெனியில் வெளிநாட்டு மாணவர்களும் உயர்கல்வி இலவசமாக பெற இயலும்.தற்போது மாணவர்களாகிய நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்றால்அதற்கு உங்கள் பெற்றோர்களே காரணம். அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலமாக 8 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றனர்.

    உயர்கல்வி

    தமிழ்நாடு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் விகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.

    இந்தியாவிலேயே உயர் கல்வி பெறுவதில் பீகார் மிகவும் பின்தங்கி உள்ளது.இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கு அதிகளவில் பணம் செலவு செய்ய வேண்டும்.

    உலகிலேயே கல்விக்கு அதிகமாக செலவு செய்யக்கூடிய நாடு இஸ்ரேல். தற்போது இந்தியா கண்டுபிடிப்புகளில் 46-வது இடத்தில் உள்ளது.உலக அளவில் பொருளா தாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது.நாம் தற்போது தொழில் துறையில் வளர்ந்துள்ளோம்.அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    பொருளாதார வளர்ச்சி

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேசியதாவது:-

    உக்ரைன் போரால் ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் வீட்டுக் கடன் அதிகமாக உள்ளது. இது தற்போது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.

    நமக்கு போட்டியாக இருக்கும் சீனாவில் 20 சதவீத வேலையின்மை உள்ளது.இந்தியாவில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வேலையின்மையை சரி செய்வதற்காக அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது.இந்தியா 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இடம்பெறும்.

    தற்போது இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களாகிய நீங்கள் கல்வி பயில்வதற்கு விஐடி சிறந்த இடமாக உள்ளது.

    இந்தியாவின் ஜிடிபியில் தகவல் தொழில்நுட்பம் 7.2 சதவீத பங்கு வகிக்கிறது.தகவல் தொழில்நுட்பத்துறை அடுத்த 10 -20 ஆண்டுகளில் வேகமாகக வளர்ச்சி அடையும்.

    மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.தற்போது உலகம் மாறி வருகிறது.முழு நேர வேலை, பகுதி நேர வேலை போன்றவை உருவாகிறது.இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக யு.பி.எஸ். நிறுவன தலைமை மேலாளர் பராஷ் பரிக், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வி.ஐ.டி. அண்ணா அரங்கில் ரோபோ எந்திரம் மூலம் வி.ஐ.டி. வேந்தர் கிராவிடாஸ் அறிவுசார் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை பார்வையிட்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    வேலூர்:

    வேலூரை அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள தீர்த்தகிரி மலைபகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் புங்கன், தூங்குவாகை, ஆலம், அரசம், சரக்கொன்றை, மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மர விதைகளை மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலைப்ப குதியில் ஆங்காங்கே தூவினர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஒரு ஒன்றிய குழு தலைவர், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மீட்பு
    • போலீசார் வழக்குப்பதிவு

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42), ஐ.டி. ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மகதி என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.

    பாலாஜி கடந்த 3-ந் தேதி திருப்பதிக்கும், தாயார் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மனைவி, மகள் மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவிற்கும் சென்றனர்.

    உஷாராணி சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.

    • விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது வீட்டில் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது.

    உடனே அருகில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஒருவர் உதவியுடன் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்தனர்.

    பின்னர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர். பாதுகப்பு கருவிகள் இல்லாமலும், உரிய பயிற்சி இல்லாமலும் பாம்புகளை பிடிக்கும் போது அவை கடித்தால் உயிர் இழக்க நேரிடும் எனவே விஷமுடைய பாம்புகளை பார்த்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கவும்.

    இது போல் தன்னிச்சையாக செயல்பட்டு விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துைறயினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேமராக்களை சீரமைக்க வலியுறுத்தல்
    • திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26) இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் வெட்டுவானம் எல்லை யம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.

    அப்போது இவரது வாகனத்தை கோவிலுக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தார். அதற்குள் பைக்கை திருடி சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது குறித்து பக்தர்கள் கூறுகையில்

    கோவிலை சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இது திருட்டு நடைபெறுவதற்கு காரணமாக அமைவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதுடன் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோன்று கடந்த மாதம் கோவிலுக்கு வந்த பெண் பக்தரின் கழுத்தில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டதும் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர இல்லாததால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர், போலியான சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.

    அதன்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழு அமைத்து போலி ஜாதி சான்றிதழை கொடுத்து தேர்தல் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.

    காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கழிவுநீருடன் கலந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அறிவிப்பு
    • அதிகபட்சமாக மோர்தானா அணைப்பகுதியில் 31 மில்லி மீட்டர் பதிவானது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மோர்தானா அணைப்பகுதியில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்து விழுந்தன.

    காகிதப்பட்டறையில் உழவர் சந்தை அருகே சாலையோரம் இருந்த கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அதில் எச்சரிக்கை தடுப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை .இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    காலையில் தொடர் மழை பெய்ததால் வேலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.

    மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. பருவமழை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு

    வேலூர் 17.3 ,குடியாத்தம் 2, அணைக்கட்டு 4, மோர் தானா அணை 31, கே. வி குப்பம் 4, காட்பாடி 5.2, பொன்னை 10.6, சத்துவாச்சாரி 8.7, பேரணாம்பட்டு 2.8.

    • வாலிபர் கொலை தொடர்பாக ஆந்திராவில் தனிப்படை தேடுதல் வேட்டை
    • கொலையானவரின் விவரங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை

    வேலூர்:

    வேலூர் கோட்டை கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணத்தை பெட்சீட்டால் சுற்றி வீசப்பட்ட வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்டவர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையாளிகள் யார் என தெரியவில்லை. வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

    இருப்பினும் கொலையானவரின் விவரங்களை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கொலை செய்யப்பட்ட நபர் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

    தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என பச்சை குத்தப்பட்ட அடையாளத்தை வைத்து ஆந்திராவுக்கு சென்று விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டது
    • எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சூப்பர் மலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் 150 மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக குறு மேசைகள் வழங்கப்பட்டன.

    இதன் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    • பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
    • வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    அடுக்கம்பாறை:

    பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

    கூட்டத்தில், பென்னாத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் உத்தரவின் படி, எரிவாயு மின்மயானம் தகனமேடை மூலம் உடல்கள் தகனம் செய்ய வேண்டும். இதற்காக தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்தல், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அயோத்தி தாஸ் பண்டிதர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனுமதி கோருதல், பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, பணியினை மேற்கொள்ள அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜவ்வாது மலையில் தொடர் மழை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    அணைக்கட்டு:

    ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உத்திரகாவேரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் மழையினால் மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது.

    இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

    • வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • வாலிபரை எச்சரித்து அனுப்பினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மதரஸாபள்ளியில் உள்ள டியூஷனுக்கு சென் றார். இரவாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டியூஷன் சென்டரில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிறுமி வரவில்லை என்று தெரியவந்தது.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம், பலமநேரை சேர்ந்த ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரி யவந்தது.

    இதையடுத்து, போலீசார் இருவரையும் நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

    இதில், இருவரும் காத லிப்பதாக தெரிவித்தனர். பெண்ணிற்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலை யில் போலீசார் சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர். சிறு மியை அழைத்து சென்ற வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×