என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rain at dawn"
- வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
அவர்கள் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முதல் விடியும் வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறி மாறி பெய்தது.
சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்க ப்பட்டனர். பாத்திரங்களை வைத்து தண்ணீரை வெளியேற்றினர்.
அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். வேலூர் கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் சாலைகளை குளம் போல் தேங்கியது. இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பே ட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி வசந்தம் நகரில் தெருக்களில் தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் அகற்றும் இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வீடுகளில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.
வேலூரில் அதிகபட்சமாக சத்துவாச்சாரியில் 52.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதில் திருவண்ணாமலையில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 42.60, போரூரில் 62.80, ஜமுனாமரத்தூரில் 26, கலசபாக்கத்தில் 89, தண்டராம்பட்டில் 30.40, ஆரணியில் 47.40, செய்யாறில் 78, வந்தவாசியில் 26, கீழ்பெண்ணாத்தூரில் 84, வெம்பாக்கத்தில் 53, சேத்துப்பட்டு 37.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை மழை தூரல் போட்ட வண்ணம் இருந்தது.
திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் விடியும் வரை பலத்த கன மழை பெய்தது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்