search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்களுக்கு இடையில் சிக்கி தொழிலாளி சாவு
    X

    பஸ்களுக்கு இடையில் சிக்கி தொழிலாளி சாவு

    • பஸ்சில் இருந்து கீழே இறங்கிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) தொழிலாளி. இவர் நேற்று இரவு சோளிங்கரிலிருந்து வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.

    பஸ் புதிய பஸ் நிலையத்தில் நின்ற போது கீழே இறங்கினார். அப்போது குடியாத்தத்தில் இருந்து வந்த தனியார் பஸ் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சை ஒட்டியபடி வந்தது.

    இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணமூர்த்தி 2 பஸ்களுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×