என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A boy was born"
- பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு
- சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்
வேலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் என்பவர் மனைவி நாகரத்தினம் (வயது 30). இவர் கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரசவம் பார்த்த பெண்போலீசுக்கு பாராட்டு
- முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி
அரக்கோணம்
திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்து வருபவர் அஸ்வின் குமார். இவரது மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான அவரை சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு பிரசவத் துக்காக நேற்று முன்தினம் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அஸ்வின் குமார் அழைத்துச்சென்றார்.
ரெயில் அரக்கோணம் அருகே வந்தபோது சாந்தினிக்கு பிரசவவலி அதிகமானது. இது குறித்து அஸ்வின் குமார் உடனே அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில் அரக்கோணம் வந்தடைந்ததும் அங்கு தயாராக இருந்த பெண் போலீசார் சாந்தினியை இறக்கி பெண்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண் போலீஸ் பரமேஸ்வரி உதவியுடன் சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சாந்தினி மற்றும் பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரசவத்திற்கு உதவியாக இருந்த அரக்கோணம் ரெயில்வே பெண் போலீஸ் பரமேஸ்வரியை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்