என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snake rescue"

    • தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட் சிக்குட்பட்ட பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். மர வியாபாரி.

    நேற்று இவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது.

    இதைக் கண்ட இவரது குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டனர்.

    பின்னர் வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு திருப்பத்தூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சிறிது நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பின்னர் அதை சாக்கு பையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு மீட்கப்பட்டது.
    • அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யனார். இவர் கமுதி பஸ் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் சிறிய பாம்பு இவரது மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்தது. இதனை கண்ட அய்யனார் உடனே நிதி நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன் மற்றும் பார்த்திபன் தலைமையில் வீரர்கள் உடனடியாக வந்து மோட்டார் சைக்கிளின் பாகங்களை பிரித்து உள்ளே இருந்த 3அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).

    நேற்று திடீரென இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் அருகே இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

    இதனை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    • தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே கெங்கசானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவர் தன்னுடைய விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது சுமார் 10 அடி நீளம் உடைய சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பம்பு செட்டிற்குள் சென்றது.

    இதனை யடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்க த்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாரைப்பா ம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    • தீயணைப்புதுறையினர் மீட்டனர்
    • காட்டில் கொண்டுபோய் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனை கவனிக்காத குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய நாகபாம்பை லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். 

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், 9 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மலை பம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.

    ×