வீட்டில் புகுந்த 6 அடி நீள பாம்பு

தீயணைப்புதுறையினர் மீட்டனர் காட்டில் கொண்டுபோய் விட்டனர்
வீட்டில் புகுந்த 6 அடி நீள பாம்பு
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

இதனை கவனிக்காத குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய நாகபாம்பை லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com