என் மலர்
உள்ளூர் செய்திகள்

பம்பு செட்டில் புகுந்த 10 நீள பாம்பு மீட்பு
- தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே கெங்கசானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் தன்னுடைய விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது சுமார் 10 அடி நீளம் உடைய சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பம்பு செட்டிற்குள் சென்றது.
இதனை யடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்க த்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாரைப்பா ம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
Next Story






