search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் கைது
    X

    அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் கைது

    • ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆரணி:

    வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

    ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.

    அவரை சந்தவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டித்து வேலூர் மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×