என் மலர்tooltip icon

    வேலூர்

    • வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    அவர்கள் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முதல் விடியும் வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறி மாறி பெய்தது.

    சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்க ப்பட்டனர். பாத்திரங்களை வைத்து தண்ணீரை வெளியேற்றினர்.

    அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். வேலூர் கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் சாலைகளை குளம் போல் தேங்கியது. இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பே ட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி வசந்தம் நகரில் தெருக்களில் தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் அகற்றும் இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வீடுகளில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    வேலூரில் அதிகபட்சமாக சத்துவாச்சாரியில் 52.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.

    இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதில் திருவண்ணாமலையில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 42.60, போரூரில் 62.80, ஜமுனாமரத்தூரில் 26, கலசபாக்கத்தில் 89, தண்டராம்பட்டில் 30.40, ஆரணியில் 47.40, செய்யாறில் 78, வந்தவாசியில் 26, கீழ்பெண்ணாத்தூரில் 84, வெம்பாக்கத்தில் 53, சேத்துப்பட்டு 37.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராணிப்பேட்டையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை மழை தூரல் போட்ட வண்ணம் இருந்தது.

    திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் விடியும் வரை பலத்த கன மழை பெய்தது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு நடந்தது
    • வினோத்காந்தி தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதாசீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் தென்போ ஸ்கோ வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் வினோத்காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    • 780 லிட்டர் தரையில் கொட்டி அழித்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்

    அணைக்கட்டு:

    வேலூர் மதுவிலக்கு. அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கூனம்பட்டி மலைப்பகுதியில் ஓடையோரம் 26 லாரி டியூப்பில் தலா 30 லிட்டர் வீதம் 780 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடி க்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.

    போலீசார் விசாரணையில் கூனம்பட்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • பஸ்சில் இருந்து கீழே இறங்கிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) தொழிலாளி. இவர் நேற்று இரவு சோளிங்கரிலிருந்து வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.

    பஸ் புதிய பஸ் நிலையத்தில் நின்ற போது கீழே இறங்கினார். அப்போது குடியாத்தத்தில் இருந்து வந்த தனியார் பஸ் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சை ஒட்டியபடி வந்தது.

    இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணமூர்த்தி 2 பஸ்களுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரில் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
    • ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

    வேலூர்:

    வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.

    இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.

    இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.

    இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

    சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரமேத்குமார் (வயது 25). இவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு தனது பைக்கில் சென்றார்.

    அகரம்சேரி அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரமேத்குமார் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்
    • நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 270 மா ணவர்கள் படிக்கின்றனர்.

    இதில் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது.

    அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்ந்தது. இதில் 12 மாணவர்கள் விருப்பப்பட்டு மனுதாக்கல் செய்தனர்.

    போட்டியாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, பிரச்சா ரங்களும் நடைப்பெ ற்றன. கண்கண்ணாடி, ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, தொப்பி, சீப்பு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றிருந்தது.

    மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சக மாணவர்களிடம் தங்களுக்கான வாக்குகளை சேகரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    100 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக பள்ளியில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அமைச்சரவை எப்படி அமைப்பது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மேலும் போட்டியில் வெற்றி பெறுவோர் சுற்றுப்புற தூய்மை, சுற்றுச்சூழல், இறைவணக்க கூட்டம், கழிவறை பராமரிப்பு பணிகளை கண்காணித்தல், காலை உணவு மற்றும் மதிய உணவுகளை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலைவராக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, பட்டதாரி ஆசிரியை ரமாதேவி, ஆசிரியர்கள் ரோஸ்லின், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.
    • அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.

    இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.

    இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.

    இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
    • வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, 30.03.2022-ல் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

    இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள நோடெல் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெண்களுக்கு 33 சதவீதம்
    • மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும்

    வேலூர்:

    த.மா.கா. மகளிரணி துணை தலைவி வீ.கீதா தேச பக்தன் கூறியிருப்பதாவது:-

    ஜவஹர்லால் நேரு, மொராஜ் தேசாய், வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வர முடியாத காலத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் திட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கியும் பாராளுமன்ற ராஜசபையிலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    ஆனால் எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பாராளுமன்ற அரங்கத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் சட்டத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்து்ளார்.

    மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும். உலக அரங்கில் பாரத நாடு பெருமை பெறும். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக வரவேண்டும். இந்நாளில் தமிழ் மக்களின் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பாகவும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இவ்வாண்டு முதல் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தல், தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி ஆயத்த ஆடைகள் தைத்தல், வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ் ரிக் போரிங், ரெப்ரிஜரேட் ட்ரக் உள்ளிட்ட திட்டமாகவும் இருக்கலாம்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் உச்ச வரம்பு ரூ.150 கோடி வரை வழங்கப்படும். திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக வழங்க வழிவகை செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.

    கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 51சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும், வயது வரம்பு 18 முதல் 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

    பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonlinetn.gov.in என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு வேலூர், காந்திநகர், காங்கேயநல்லூர் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அல்லது 0418-2242512, 2242413 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு காயிதே மில்லத் கூட்ட அரங்கம் கலெக்டர் வளாகத்தில் நடைபெற வுள்ளது.

    ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில்மு னைவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×