என் மலர்
வேலூர்
- ஊசூர் அரசு பள்ளியில் நடந்தது
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 270 மா ணவர்கள் படிக்கின்றனர்.
இதில் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் நடந்ந்தது.
இதில் 12 மாணவர்கள் விருப்பப்பட்டு மனுதாக்கல் செய்தனர். போட்டியாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, பிரச்சாரங்களும் நடை ப்பெற்றன. கண்கண்ணாடி, ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, தொப்பி, சீப்பு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றிருந்தது. மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சக மாணவர்களிடம் தங்களுக்கான வாக்குகளை ஆர்வத்துடன் சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
100 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக பள்ளியில் வைத்து பூட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அமைச்சரவை எப்படி அமைப்பது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சுற்றுப்புற தூய்மை, சுற்றுச்சூழல், இறைவணக்க கூட்டம், கழிவறை பராமரிப்பு பணிகளை கண்காணித்தல், காலை உணவு மற்றும் மதிய உணவுகளை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலை வராக நியமிக்கப்ப ட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, பட்டதாரி ஆசிரியை ரமாதேவி, ஆசிரியர்கள் ரோஸ்லின், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்,
கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆபரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.
இதில் பேரூராட்சி க்குட்பட்ட வார சந்தையை ரூ.1.35 கோடியில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்கி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
- 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாலாற்றில் நேற்று முதல் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
இதன் காரணமாக குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தில் இருந்து அகரம்சேரி கிராமத்திற்கு செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக மண் சாலையும் அடித்து செல்லப்பட்டது.
இந்த ஆற்றின் வழியாக செல்லும் கொத்தகுப்பம், பட்டு, மேல்ஆலத்தூர், ஆலம்பட்டை, கூட நகரம், உள்ளி, குடியாத்தம், ஒலக்காசி, அகரம்சேரி, உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மண்சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தினந்தோறும் அந்த வழியாக செல்லும் கூலித் தொழிலாளர்கள், தோல் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வீட்டில் வசிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்
- மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
நேற்று இரவு மாலை முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக வேலூர் முள்ளிப்பாளையம் தர்கா தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் சாலை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள தால் அப்பகுதி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் வெளியே வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் அப்பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை அழைத்து வந்து அங்குள்ள 2 கோவில்களில் பாடம் நடத்தினர்.
இது குறித்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனை வரும் வந்து பார்த்துவிட்டு உணவு மட்டும் வழங்கி விட்டு செல்கின்றனர்.
இதற்கு நிரந்தரமான தீர்வு காண இதுவரை எடுக்கவில்லை. நாங்கள் இதே போல அவதிப்பட்டு வருகிறோம். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு இப்பகுதிக்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் அங்கு தற்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் வீட்டில் வசிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
- கிராம மக்கள் அச்சம்
- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வேலூர்:
குடியாத்தம் அருகே பக்கத்து கிராமத்திற்கு குடி புகுந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலே முடங்கினர். மேலும் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
காட்டு யானைக்கு பயந்து கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அறுவடைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்தனர்.
இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் இருந்து வெளியேறி, மேல்அனுப்பு கிராமத்திற்குள் புகுந்தது காட்டு யானை. விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவரின் நிலத்தில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் பயிர்களை மிதித்து சேதம் செய்தது.
அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த வனஜா என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்களையும் சேதப்படுத்தியது.
பகல் நேரங்களிலும் கிராமத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், அதனை தடுக்கவோ அல்லது பிடித்து வேறு பகுதியில் விடவோ வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காட்டு யானையை பிடித்து உடனடியாக வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- விவசாயிகள் வேதனை
- தென்னை மரங்கள், பயிர்கள் சேதம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தற்போது, விவசாயிகள் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் புத்துயிர் பெற்று செழுமையாக உள்ளது. இருந்தாலும், இந்த கனமழை நீடித்தால் மற்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு
- சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்
வேலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் என்பவர் மனைவி நாகரத்தினம் (வயது 30). இவர் கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர் மழை காரணமாக பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 60), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானம்மாள் (55).
தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஜயன் தனது குடும்பத்தி னருடன் மண்சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் விஜயன் வீட்டின் மண் சுவர் முழுவதும் மழை நீரில் நனைந்து ஈரமானது.
விஜயன் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ஞானம்மாள் வீட்டில் உள்ள சுவரின் அருகே பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மண்சுவர் எதிர்பாராத விதமாக ஞானம்மாள் மீது இடிந்து விழுந்தது.
வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சுவரின் இடிபாடுகளில் சிக்கி ஞானம்மாள் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஞானம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், சப்-கலெக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆரணி:
வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.
அவரை சந்தவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து வேலூர் மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா எல்லை பகுதியான மாதகடப்பா, வீரனமலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி திம்மாம்பேட்டை மன்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவரங்குப்பம் வழியாக மழை நீர் பாலாற்றில் கலந்து வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் செதுவாலை ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் பாலாற்றின் கிளை ஆறுகளான குடியாத்தம் கவுன்டண்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒடுகத்தூர் அருகே உள்ள உத்தர காவேரி ஆறு, கணியம்பாடி அருகே உள்ள நாகநதி ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே கெங்கசானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் தன்னுடைய விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது சுமார் 10 அடி நீளம் உடைய சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பம்பு செட்டிற்குள் சென்றது.
இதனை யடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்க த்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாரைப்பா ம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
- அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்z
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் சத்துவாச்சாரி இந்திராந கர் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கட்டுமான பணிக் காக அங்கு வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பிகளை 2 பேர் திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் களை பிடித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வினோத்கு மார் (வயது 28). சைதாப்பேட் டையை சேர்ந்த நீலகண்டன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






