search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆயிரம் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி
    X

    2 ஆயிரம் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி

    • உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • 46 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது

    வேலூர்:

    உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கால்நடை மண்டல இணை இயக்குனர் கோபி கிருஷ்ணா திட்ட அறிக்கை வாசித்தார். கால்நடைதுறை டாக்டர் அந்துவன் தலைமை தாங்கினார்.

    முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் விதவிதமான நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்று மாவட்ட முழுவதும் சுமார் 46 இடங்களில் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முகாமை விடுபட்டவர்களுக்கு மற்ற நாட்களில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×