என் மலர்
வேலூர்
- 90 சதவீதம் பணிகள் நிறைவு
- இந்த ஆண்டு இறுதியில் விமான சேவை தொடங்க நடவடிக்கை
வேலூர்:
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப் பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடை ந்துள்ளது.
இங்கிருந்து விமானங்கள் பறப்பதற்கும், தரையிறங்கு வதற்கும் அந்த பகுதியில் உள்ள 25 அடி உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. அதனால் விமான நிலை யத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தும் பணிகள் மற்றும் இங்கிருந்து இந்த ஆண்டிற்குள் விமான சேவை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி விமான ஓடுதளப்பாதையின் அருகே விமானங்கள் இறங்குவதற்காக பிரத்யே கமாக அமைக் கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல்வே ளையில் சரியாக தெரிகிறதா என்றும், விமானத்தில் இருந்து தகவல் கட் டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரத்தில் இருந்து சிக்னல் கிடைக்கிறதா எனவும் முதற்கட்ட சோதனை செய்யப்பட்டது. இதற்காக விமான போக்கு வரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம் புதுடெல்லி யில் இருந்து சென்னை வழி யாக வேலூருக்கு வரவ ழைக்கப்பட்டது. அப்துல்லா புரம் விமான நிலைய ஓடுபா தையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனை செய்யப் பட்டது. இதனை புதுடெல்லியை சேர்ந்த விமானங்கள் ஆய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. செய்தனர். இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீய ணைப்பு வாகனம் விமான நிலைய ஓடுதளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அப் துல்லாபுரம் விமானநி லையத் தில் சிக்னல், மின்வி ளக்குகள் தொடர்பாக விமானம் இயக்கி மேற்கொ ள்ளப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அடுத்தக்கட்டமாக விமான ஓடுதள பாதையில் விமா னத்தை இறக்கி சோதனை செய்ய உள்ளோம். விமானம் இயங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள் ளோம். விரைவில் அனுமதி கிடைத்து விடும்.
இந்த டிசம்பர் மாதத்திற்குள் இங்கிருந்து விமான சேவை தொடங்கப் படும் என்றனர்.
- விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாக புகார்
- தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வெங்கனபாளையம் பகுதியில் மோகன் என்பவரது வீட்டில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. அதேபோல் ஒடுகத்தூரில் தினேஷ் என்பவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது.
இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் வீட்டில் புகுந்த பாம்புகளை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:-
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளில் தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டாம் உடனடியாக அகற்றிவிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
- டிரைவர் காயங்களுடன் உயிர்தப்பினார்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு லோடு வேன் ஒன்று கீரைகள் ஏற்றிக்கொண்டு வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேன் கவிழ்ந்தது
அப்போது பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
மேலும் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் லேசான காயங்க ளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
கீரை கட்டுகள் சேதம்
இதில் சென்னைக்கு ஏற்றி சென்ற சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆயிரம் கீரைக்கட்டுகள் கீழே விழுந்து நாசமானது.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லோடு வேனை மீட்டு போலீஸ்நிலையம் எடுத்து வந்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வன பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை
- வனத்துறையினர் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் ஆங்காங்கே பல இடங்களில் நீர்த்தேக்க பள்ளங்களை தோண்டி உள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.
தற்போது பள்ளங்களில் தேங்கிய தண்ணீரை வனவிலங்குகள் குடித்துவிட்டு செல்கி ன்றனர். இதில் தண்ணீர் குடிப்பதற்காக காட்டு யானை ஒன்று வந்தது. தண்ணீரைக் குடித்துவிட்டு, மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.
யானை தண்ணீரில் குதித்து விளையாடும் வீடியோ காட்சிகள், வனத்துறையினர் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிருந்தன.
எனவே பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள வனப்பகுதிக்குள் பொதுமக்கள் காப்பு காட்டிற்குள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்யாரும் காப்புக்காட்டு பகுதியில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருப்பதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்ப வில்லை.
சிறுமியை அவர்கள் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து குடியாத்தம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது
- மரக்கன்றுகள் நடப்பட்டன
வேலூர்:
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சார்பில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ஆரணி சாலை, மூஞ்சூர்பட்டு சாலை, வேலூர் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மருத்துவமனையில் முடிவடைந்தது.
மருத்துவ மாணவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒடுக்கத்தூரை அடுத்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், டெய்லர். இவரது மகன் துர்கபிரசாத் (வயது 12). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பாக்கம் சாலையில் சைக்கிளில் சென்றபோது, மோட்டார்சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சிகிச்சை பெற்று வந்த நிலையில் துர்கபிரசாத் மூளைச்சாவு அடைந்தான்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (42) என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
மூளைச்சாவு அடைந்த துர்கபிரசாத் மற்றும் கலைச்செல்வி ஆகியோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, 4 சிறுநீரகம், 2 கல்லீரல், 2 இதயம், 2 இதய வால்வுகள் மற்றும் கண்கள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.
இந்தநிலையில், உடல் உறுப்புகள் தானம் வழங்கிய துர்கபிரசாத்தின் தந்தை சதீஷ் மற்றும் கலைச்செல்வியின் மகள் மோனிகா ஆகியோரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்று வரவழைத்து டீன் பாப்பாத்தி சான்றுகள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரை அடுத்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 50).
இவருடைய கணவர் இறந்து விட்டதால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு ரேஷ்மா (6) என்றபெண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் புவனேஸ்வரி, மகள் ரேஷ்மாவுடன் அதேப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார்.
அப்போது ரேஷ்மா கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் புவனேஸ்வரி மகளை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார்.
நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதில் 2 பேரும் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு சென்ற தாலுகா போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகள் கல் குவாரி குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர்:
புரட்டாசி மாதத்தின் 2-ம் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.
குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- சிறுநீரகம் செயல் இழந்து, மூச்சடைப்பு ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
வேலூர்:
தர்மபுரி மாவட்டம், கொங்கராம்பட்டி யை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் பொம்மிடி போலீசார் ரவியை கைது செய்தனர்.
வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஒரு ஆண்டாக ஜெயிலில் உள்ள ரவிக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் செயல் இழந்தது.
சிறுநீரகம் செயல் இழப்பிற்கு ரவி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரவியை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணி களை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர்,பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம்உ ள்ளிட்ட எந்திரங்களும், கல்டி வேட்டர், ரோட்ட வேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்ப டுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், 2022-23 ஆண்டு 2-ம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.206 கோடி மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.
மேலும், 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு
முதல்-அமைச்சர் அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதும் 5000 பவர்டில்லர், பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.
- கலெக்டர் தகவல்
- அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
வேலுார்:
தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்க ளில், வெடிப்பொருட்கள் விதிகள் 2008-ன் கீழ், வேலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையா ளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தோடு, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கட்ட டத்துக்கான வரைபடம் (சொந்த இடமாக இருப்பின், பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்த ப்பத்திரம்), உரிமத்துக்கான கட்டணம் செலுத்தி யதற்கான அசல் சலான், மனுதாரர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்புக் காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவு சுமார் 15 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.






