என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் கொலை கைதி திடீர் சாவு
- சிறுநீரகம் செயல் இழந்து, மூச்சடைப்பு ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
வேலூர்:
தர்மபுரி மாவட்டம், கொங்கராம்பட்டி யை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் பொம்மிடி போலீசார் ரவியை கைது செய்தனர்.
வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஒரு ஆண்டாக ஜெயிலில் உள்ள ரவிக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் செயல் இழந்தது.
சிறுநீரகம் செயல் இழப்பிற்கு ரவி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரவியை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






