search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale of firecrackers"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட அறிவுறுத்தல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகள் குவிக்கப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தரமான பட்டாசு நிறுவனங்களிடம் இருந்து 65 லட்ச ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதில் 450 ரூபாய் முதல் 1865 ரூபாய் வரையில் கிப்ட் பாக்ஸ்கள், சாக்லேட் கேண்டில், டிக்கேட், அனிமல் ஷோவர், டெம்பிள் ரன், டைனோசர், ஜிராபி, கிண்டர் ஜாய், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஆகிய சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    • கலெக்டர் தகவல்
    • அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    வேலுார்:

    தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்க ளில், வெடிப்பொருட்கள் விதிகள் 2008-ன் கீழ், வேலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையா ளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தோடு, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கட்ட டத்துக்கான வரைபடம் (சொந்த இடமாக இருப்பின், பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்த ப்பத்திரம்), உரிமத்துக்கான கட்டணம் செலுத்தி யதற்கான அசல் சலான், மனுதாரர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • சங்கத் தலைவர் எ.வி.தனபால் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.
    • .ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை தொடக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் எ.வி.தனபால் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். துணைத்தலைவர் வி.பழனி, பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார் தற்போதைய துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், சங்க இயக்குனர்கள், பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    பொதுமக்கள் சேவைக்காக உயர்ரக பட்டாசு ரகங்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தலைவர் எ.வி.தனபால் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    சேலம் மாவட்ட கூட்டுறவு பட்டாசு கடைகளில் தரமான பட்டாசுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் சிவகாசியிலிருந்து ஸ்டேண்டர்டு, அணில் போன்ற சிறந்த கம்பெனிகளிலிருந்து ரூ.1.36 கோடி அளவில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் (பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி) பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. மேலும் இளம்பிள்ளை தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, காடையாம்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, மேட்டூர் அரசு பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை, ஸ்வர்ணபுரி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை என்ஜீஜிஓ தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைமையகங்களில் மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நியாயமான விலையில் தரமான பட்டாசுகளை வாங்கி பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

    ×